தரிசு நிலங்களில் ஏற்பட்ட தீ விபத்து !

சாணார்பட்டி அருகே மேட்டுகடையில் சாலையோரம் தரிசு நிலங்களில் ஏற்பட்ட தீ விபத்தில்முள் செடிகள் ஏறிந்து நாசமானது.

Update: 2024-03-28 07:36 GMT

 தீ விபத்து

சாணார்பட்டி அருகே மேட்டுகடையில் சாலையோரம் தரிசு நிலங்களில் ஏற்பட்ட தீ விபத்தில்முள் செடிகள் ஏறிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மேட்டுகடையில் சாலைரோம் காய்ந்த தரிசு நிலங்களில் திடீரென தீப்பிடித்து எறிந்தது. இந்த தீ காட்டுத்தீயாக மாரி சில நிமிடங்களில் கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள முட்செடி புதர்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த தரிசு நிலத்தில் பெரிய அளவில் விவசாயம் ஏதும் இல்லாத காரணத்தால் பெரும் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்தப் பகுதியில் சில கடமைகள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. இந்த தீயானது அருகில் உள்ள இடங்களில் மிக வேகமாக பரவி விடும் அச்சத்தில் பொதுமக்கள் உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த நத்தம் தீயணைப்புத்துறைவீரர்கள் தீயை அருகில் உள்ள இடங்களில் பரவாமல் தீயை அணைத்தனர்.இதன் காரணமாக இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News