பேராவூரணி: இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

பேராவூரணி அருகே முன்விரோதத்தில் இளைஞரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Update: 2024-05-08 15:03 GMT

பேராவூரணி அருகேயுள்ள கைவனவயல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவருக்கும் பக்கத்து கிராமமான முடச்சிக்காட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், செல்போனில் கார்த்திக்கை தொடர்பு கொண்ட அருள்ராஜ் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.பதிலுக்கு கார்த்திக்கும் திட்டியுள்ளார். 

இந்நிலையில், நேற்று இரவு பூக்கொல்லை கடைவீதிக்கு வந்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கார்த்திக்கை அருள்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சுப்பிரமணியன், முத்துச் செழியன் ஆகியோர் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடினர்.

இதில், பலத்த காயமடைந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பசுபதி, அருள்ராஜ், சுப்பிரமணியன், முத்துசெழியன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.  

Tags:    

Similar News