திருவேங்கடம் அருகே மோசடியில் ஈடுபடும் கும்பல்

திருவேங்கடம் அருகே மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-02 12:48 GMT

திருவேங்கடம் அருகே மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் அறக்கட்டளையிலிருந்து பேசுகிறோம். நீங்கள் நாங்கள் அனுப்புகிற கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் உங்களுக்கு பணம் வரும் என கூறி பல பேரை ஏமாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இந்திரா நகரை சேர்ந்த சங்கர்ராஜ் என்பவரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News