பணகுடி அருகே இரவில் கவிழ்ந்த அரசு பேருந்து
அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Update: 2024-02-01 07:01 GMT
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனையில் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில் இது குறித்து தகவல் அறிந்த பணகுடி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இரவில் பேருந்து கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.