ராசிபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் முப்பெரும் விழா ...

ராசிபுரம் தூய இருதய அரசு உதவிப் பெறும் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2024-03-30 11:09 GMT

 முப்பெரும் விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தூய இருதய அரசு உதவிப் பெறும் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி ஆண்டு விழா, பெற்றோர் தினவிழா, ஒய்வு பெற்ற பள்ளியின் ஆசிரியர் செலினாவிற்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சேலம் மறை மாவட்டத்தை சேர்ந்த பிஷப் அருள் செல்வம் ராயப்பன் பங்கேற்று தலைமை வகித்தார். ராசிபுரம் லூர்து அன்னை திருச்சபை தேவாலய பாதிரியார் பங்கு தந்தை ஜான் ஆரோக்கியராஜ், சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னள் நிதி அலுவலர் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், ராசிபுரம் தூய இருதய பள்ளி நிர்வாகி ரீட்டாராணி, தலைமையாசிரியர் மோனிகா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். ஒய்வு பெற்ற ஆசிரியரை செலினா பள்ளி ஆண்டறிக்கை வாசித்து ஏற்புரையாறறிப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கெளரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News