திருவானைக்காவல் பகுதியில் சாலையில் கிடந்த துப்பாக்கி

Update: 2023-12-20 06:28 GMT

துப்பாக்கி 

திருவானைக்காவல்  மாம்பழச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ரமேஷ். இவரது மகன்கள் சீனிவாசன், விக்னேஷ்வரன் ஆகியோா் திங்கள்கிழமை அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தனா். அப்போது அங்கு தெருவில் துப்பாக்கி கிடந்தது. உடனடியாக அதை எடுத்து தந்தையிடம் அவா்கள் கொடுத்தனா். அவா் அருகிலிருந்த அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் அந்தத் துப்பாக்கியை சோதனை செய்ததில், அது ஏா் பிஸ்டல் துப்பாக்கி என்பதும், பால்ரஸ் குண்டு போட்டு 10 மீட்டா் வரை சுட கூடியது என்பதும் தெரிய வந்தது. இதை வைத்திருக்க உரிமம் ஏதும் தேவையில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா். இந்தப் பகுதியில் இந்த துப்பாக்கியை யாா் போட்டுவிட்டு சென்றனா் என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Tags:    

Similar News