தொடக்கப்பள்ளி கல்வி ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.

கரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-27 08:05 GMT

கரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம். கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் வேலுமணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொது செயலாளர் ராஜா, மற்றும் இருதயசாமி, மாவட்ட பொருளாளர் தமிழரசி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சாந்தி உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

துவக்கத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் பெரியசாமி துவக்கி வைத்தார். இன்று காலை துவங்கி மாலை வரை நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான மாவட்ட, மாநில நிர்வாகிகள், மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News