வாடிக்கையாளர் மீது ஆசிட் ஊத்திய நகை பட்டறையாளர்

மானாமதுரையில் வாடிக்கையாளர் மீது ஆசிட் ஊத்திய நகை பட்டறையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-02 16:45 GMT

காயமடைந்த வாலிபர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கொம்புகரனேந்தலை சேர்ந்தவர் விஜயக்குமார். இவர் வெள்ளியிலான கருங்காலி மாலையை செய்வதற்கு கடந்த வாரம் மானாமரை காந்தி சிலை பின்புறம் அமைந்துள்ள விஜய மார்த்தாண்டன் என்ற நகை பட்டறை உரிமையாளரிடம் ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று ஆர்டர் கொடுத்த மாலையை வாங்குவதற்காக தனது நண்பன் சதீஸ்குமாருடன் மானாமதுரைக்கு சென்றபோது, மாலையின் தரம் குறித்து விஜயமார்தாண்டனுடன் வாக்குவாதம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் நகை பட்டறை உரிமையாளர் விஜய் மார்த்தாண்டன் கடையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை சதீஸ்குமார் மீது வீசி உள்ளார்.

இதனால் அலறியபடி வெளியே ஓடி வந்த சதீஸ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் விஜய மார்த்தாண்டனை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

வாடிக்கையாளர் மீது நகை பட்டறை உரிமையாளர் ஆசிட் வீசிய சம்பவம் மானாமரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Tags:    

Similar News