தக்கலை அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளி சாவு 

தக்கலை அருகே அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் தொழிலாளி மரணம். போலீசார் விசாரணை.

Update: 2024-02-07 05:02 GMT

விபத்தில் தொழிலாளி சாவு 

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (42). தொழிலாளி இவர் நேற்று முன்தினம்  பத்மநாபபுரத்திற்கு வேலை சென்று விட்டு,  இரவு  தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். மணலி ஆற்றுப்பாலம் பகுதியில் சென்றபோது, எதிரே தக்கலை நோக்கி வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதில் தூக்கி வீசப்பட்ட காளிமுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம்  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று காளிமுத்து பரிதாபமாக இறந்தார்.  இது குறித்த புகாரின் பேரில் விபத்து  ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவரான விராலிகாட்டு விளையை சேர்ந்த ஜான் கெமல்டன் குமார் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News