கல்லூரி மாணவியை தாக்கிய ஒரு தலை காதல் வாலிபர் !

நாகர்கோவிலில் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் கல்லூரி மாணவியை தாக்கியதில் காயம் ஏற்பட்டது.

Update: 2024-04-08 05:04 GMT
கிரைம்

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த சுமார் 21 வயது இளம்பெண் நேற்று நாகர்கோவில், கோட்டார் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். இவர் கல்லூரி மாணவி ஆவார். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பைக்கில் அங்கு வந்தார்.

பைக்கில் இருந்து இறங்கிய அந்த வாலிபர் திடீரென இளம்பண்ணை சரமாரியாக தாக்கினார். உடனடியாக அருகில் பஸுக்காக நின்று கொண்டிருந்த பயணிகள் அந்த வாலிபரை கண்டித்தனர்.  இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்கள் பொதுமக்கள் ஓடி வந்தவுடன் அந்த வாலிபர் வேகமாக பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டார்.      

இந்த தாக்குதலில் நிலை குலைந்த அந்த இளம் பெண்ணுக்கு  வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். இது தொடர்பாக அந்த பெண்ணிடம் பொதுமக்கள் விசாரித்த போது, வாலிபர் தனது உறவினர் என்றும் தன்னை ஒரு தலை பட்சமாக காதலித்து வருகிறார் என்றும் கூறினார்.    

பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாமா?  என்று கேட்ட போது ,  போலீசில்   தெரிவிக்க வேண்டாம் எனவும்,  பெற்றோரிடம்  தெரிவித்து கண்டிக்க கூறுவதாகவும்,  இளம் பெண்  தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News