களியக்காவிளை அருகே சொகுசு கார் மரத்தில் மோதி விபத்து
Update: 2023-12-11 03:40 GMT
கேரளாவில் இருந்து சொகுசு கார் ஒன்று இரவில் குமரி மாவட்டத்திற்கு வந்து கொண்டு இருந்தது. களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் கார் வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ்ஸில் லேசாக மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த கார் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் கார் டிரைவர் காயம் அடைந்தார். விபத்து குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதனால் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தில் காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்ற பிறகு, மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.