மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர் கைது

நெமிலி அருகே டூவீலரை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-15 11:55 GMT

இளைஞர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பத்துராயன் பேட்டையில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும், அவர் சயனபுரம் வடகண்டிகை பகுதியை சார்ந்த பிரபாகரன் (27) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News