பாலியல் குற்ற வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது.

Update: 2024-02-17 06:19 GMT

பாலியல் குற்ற வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் ஜேசிபி ஆப்ரேட்டராக உள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவர் கைது செய்யபட்டார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், மீண்டும் வேறோரு இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும், ஏற்கனவே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த இளம் பெண்ணிடம் மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி செல்வராஜ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Tags:    

Similar News