வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்த்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-12-07 11:00 GMT

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்த்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் நல்லமாநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி(40). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட எஸ்பி பாஸ்கரன்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் புறநகர் டிஎஸ்பி உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் , சார்பு ஆய்வாளர் , தனிப்பிரிவு காவலர் உள்ளிட்டோர் சின்னச்சாமி வீட்டுப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது சின்னச்சாமி வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரிய வந்ததை அடுத்து சின்னசாமியை போலீசார் கைது செய்தனர். வீட்டின் பின்புறம் வளர்த்த 2 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News