சித்திரை திருவிழாவில் கைக்குழந்தையை தவறவிட்ட தாய்

மதுரை சித்திரை திருவிழாவின்போது 3 வயது குழந்தையை மீட்ட போலீசார் தவற விட்ட தாயை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு தேடினர்.

Update: 2024-04-24 05:47 GMT

மீட்கப்பட்ட குழந்தை 

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிர்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று காலை மிக விமர்சையாக நடைபெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற பெண் ஒருவர் தனது 3 வயது பெண் குழந்தையை தவற விட்டுள்ளார் குழந்தையை மீட்டுள்ள போலீசார் தல்லாகுளம் யாதவா மக்கள் சமூக நல அறக்கட்டளை தண்ணீர் பந்தலில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். போலீசார் மற்றும் மக்கள் சமூக நல ஆர்வலர்கள் மேலும் குழந்தையை தவறவிட்ட தாயை தேடினர்.
Tags:    

Similar News