விஷம் குடித்து முதியவர் பலி
செஞ்சேரி கிராமத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-25 12:29 GMT
கோப்பு படம்
பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (75). இவர் கடந்த மே -19ம் தேதி செஞ்சேரி ஏரிக்கரை யில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் கலியமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலியமூர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.