சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கிய நபர் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-18 12:46 GMT
சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டி பகுதியில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் குருசாமி மகன் மாதவன் (33) என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து மாதவனை போலீஸார் கைது செய்தனர்.
Tags:    

Similar News