வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர் விஷம் அருந்தி தற்கொலை
நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்;
Update: 2024-02-19 09:50 GMT
தற்கொலை
சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் நல்லையன் வயது 57 . கடுமையான வயிற்று வலி காரணமாக இவருக்கு சில மாதங்களுக்கு முன்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அறுவை சிகிச்சை செய்த பின்னரும் வயிற்று வலி குறையாததால் மன உளைச்சலில் இருந்த நல்லையனா நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.