உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் , வெடி மருந்துகள் வைத்திருந்த நபர் கைது

காட்டுக்குள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றிய நபரை வனத்துறையினர் கைது செய்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-24 05:39 GMT

கைது செய்யப்பட்ட தாமோதரன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை போளூர் அடுத்த சந்தவாசல் வனச்சரக அலுவலர் சக்திவேல் அவர்களின் தலைமையில் சந்தவாசல் பிரிவு வனவர் சுப்பிரமணியன், வனக்காப்பாளர் கலையரசி, ராஜ்குமார், சந்திரன் மற்றும் பச்சையப்பன் அடங்கிய குழு ஆத்துவம்பாடி பீட் பகுதியில் இரவு ரோந்து பணி செய்து கொண்டிருந்தபோது காட்டிற்குள் வெளிச்சம் தெரிவது கண்டு உள்ளே சென்று கவனிக்கையில் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக ஒரு நபர் எதிரில் நடந்து வருவதை கண்டு சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்கையில் அவர் ஜமுனாமரத்தூர் தாலுகா, கீழ் குப்சனாவூர் கிராமத்தைச் சார்ந்த தாமோதரன் என்பதும், அவரிடம் இருந்த இரண்டு உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளையும், வெடி மருந்துகளையும் கைப்பற்றி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News