அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி குறித்து அவதூறு பரப்பியதாக திண்டுக்கல்லில் ஒருவர் கைது செய்யப்படுள்ளார்.

Update: 2024-06-22 06:55 GMT

கைது

திண்டுக்கல் ஒன்றியம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி, மாலப்பட்டி, சுப்புராம் பட்டறை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(41). இவர் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி குறித்து அவதூறு பரப்பியதாக நேற்று திண்டுக்கல் விசிக மாவட்ட செயலாளர் மைதீன் பாவா அளித்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சீனிவாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News