மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது

உடையார்பாளையத்தில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-08 05:00 GMT

காவல்துறை விசாரணை


அரியலூர், ஜூலை.7- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் தத்தனூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் அன்புமணி (53) இவர் வீட்டின் பின்புறம் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புமணியை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். _________________________________________________________
Tags:    

Similar News