தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து !
திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இரண்டு பேர் பலி.;
By : King 24x7 Angel
Update: 2024-03-01 08:51 GMT
இரண்டு பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - திண்டுக்கல் சாலையில் உள்ள குட்டூரில், திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து இன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் காட்டுவேலம்பட்டியை சேர்ந்த செந்தில்நாதன், சந்துரு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.