பெரிய காஞ்சிபுரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மழைநீர் கால்வாய்

பெரிய காஞ்சிபுரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மழைநீர் கால்வாய் மூட கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-06-16 14:41 GMT

திறந்த நிலையில் உள்ள கலவாய்

காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் மேலாண்டைகரை, தாமரை பள்ளம் தெருவில் சாலையோரம் கான்கிரீட் தளத்துடன் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது.

சாலையின் தரைமட்டத்தில் உள்ள இக்கால்வாய் தளம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, திறந்து கிடக்கும் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. 

 எனவே, தாமரைபள்ளம்தெருவில், விபத்தை தவிர்க்கும் வகையில், தளம் சேதமடைந்து திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் மீது சிமென்ட் சிலாப் போட்டு மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News