அரசு பள்ளிக்கு நிதி வழங்கிய ஆ.ராசா

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஆ ராசா நிதி வழங்கினார்.

Update: 2024-05-31 16:28 GMT

பெரம்பலூர் பாலக்கரை திமுக அலுலகத்தில், பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் தனது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாயை திமுக துணை பொது செயலாளர் ஆ.இராசா, மே 30ம் தேதி மாலை 6:30 மணியளவில் துறை அலுவலர்களிடம் வழங்கினார்.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் கட்சி நிர்வாகிகள், கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News