ரேஷன் கடையில் மேற்கூரை பந்தல் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், கரும்பாக்கத்தில் ரேஷன் கடையில் மேற்கூரை பந்தல் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-26 10:17 GMT

பந்தல் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த கரும்பாக்கத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடைக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இங்கு, கூரை பந்தல் அமைக்காததால், பொருட்கள் வாங்க வரும் பகுதிவாசிகள் மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் அவதிப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணியர், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கரும்பாக்கம் ரேஷன் கடையில், மேற்கூரை பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News