ஆபத்தான கிணற்றை மூட கோரிக்கை

தொட்டியபட்டி அருந்ததியர் தெருவில், குடியிருப்புகள் அருகில் உள்ள நீரற்ற கிணற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2023-12-29 07:55 GMT
கிணறு 
மல்லசமுத்திரம் அடுத்த, தொட்டியபட்டி அருந்ததியர் தெருவில் 40க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர், மாரியம்மன் கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டப்பட்டது. தற்சமயம், இக்கிணறு போதிய பயன்பாடு இல்லாமல் பாழும்  கிணறாக காட்சியிருக்கின்றது. இதன் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் பாலும் கிணற்றில் விழுந்து அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் இப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். ஆகவே, இக்கிணற்றை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொட்டியப்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News