லோடு ஆட்டோ மோதி பள்ளி மாணவா் பலி!

கழுகுமலையில் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதியதில் பள்ளி மாணவா் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

Update: 2024-02-20 06:11 GMT

விபத்து 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையையடுத்த அத்திப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் ஜெயந்தன் (13). கழுமலையில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்த இவா், நேற்று மாலை பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.  அப்போது லோடு ஆட்டோ ஒன்று, சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த ஜெயந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிந்து, ஆட்டோ டிரைவர் அண்ணா கீழ தெருவை சோ்ந்த சுந்தரலிங்கம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags:    

Similar News