தேர்வு எழுதச் சென்ற பள்ளி மாணவி திடீர் மாயம் !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கரட்டாம்பட்டி பகுதியில் தேர்வு எழுத சென்ற பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி திடீரென மாயமானார் காவல் நிலையத்தில் புகார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Update: 2024-04-10 08:54 GMT
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கரட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதான பள்ளி மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8 ம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.
பின்னர் இச்சம்பவம் குறித்து புலிவலம் காவல் நிலையத்தில் மாணவியின் தயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான பள்ளி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.