விசிக சார்பில் தெருமுனை விளக்க கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெருமுனை விளக்க கூட்டம்

Update: 2023-12-07 16:58 GMT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெருமுனை விளக்க கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் வருகின்ற டிசம்பர் 23 திருச்சியில் நடைபெற உள்ள வெல்லும் சனநாயகம் மாநாடு குறித்து வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகில் தெருமுனை விளக்க கூட்டம் வெண்ணந்தூர் பேரூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இறுதியில் வெண்ணந்தூர் அண்ணாசிலை அருகில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் க.நடராஜன் (எ) நாவளவன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் முன்னாள் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன், சேலம்-நாமக்கல் மண்டல துணைச் செயலாளர் வ.அரசன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய பொருளாளர் பழ.செங்கோட்டுவேல், பிள்ளாநல்லூர் பேரூர் செயலாளர் அரவிந்தன், சமூக செயற்பாட்டாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுபாஷ், வழக்கறிஞர் சசிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராசிபுரம் நகர செயலாளர் மணிமாறன், வெண்ணந்தூர் பொறுப்பாளர்கள், தமிழ்செல்வன், மாணிக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் இராசிபுரம் நகர செயலாளர் பிடல் சேகுவேரா,வெண்ணந்தூர் ஒன்றிய அமைப்பாளர் ராமச்சந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம் வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் ஒன்றிய செயலாளர் கஸ்தூரி,அபிநயா, அத்தாயி,கலா, பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் பொறுப்பாளர் மெகபூப் ஜான், பெரியார் உணர்வாளர்கள் சக்ரவர்த்தி,ரூசோ, இரத்தினம் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் சுப்ரமணி, சங்கர், துரைசாமி,கந்தசாமி,அமர்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News