விக்கிரவாண்டி அருகே சாலையோரம் இறந்து கிடந்த வாலிபர்: போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி அருகே சாலையோரம் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-06 10:49 GMT
இறந்து கிடந்த வாலிபர்
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் பள்ளதெருவை சேர்ந்தவர் பூபாலன், 32: செங்கல் அறுக்கும் கூலித் தொழிலாளி.இவர் நேற்று விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பைபாஸ் நிழற்குடை ஓரமாக உள்ள பள்ளத்தில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வாலிபரின் இறப்பு குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.