லாரி சக்கரத்தில் சிக்கி மர வியாபாரி பலி !

சேத்துப்பட்டு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மர வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-03-28 06:28 GMT
பெண் பலி 
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான் குளத்தூர் கிராமத்தை சேர்ந்த பலராமன் (50) மர வியாபாரம் செய்து வந்தார். இவர் சேத்துப்பட்டு - ஆரணி சாலை வழியாக சென்ற போது லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் பலராமன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News