உடைந்து விழும் நிலையில் சாத்தணஞ்சேரியில் மின்மாற்றி

சாத்தணஞ்சேரியில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பம், சில மாதங்களாக சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

Update: 2024-05-18 13:13 GMT

சாத்தணஞ்சேரியில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பம், சில மாதங்களாக சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சாத்தணஞ்சேரி கிராமம். இக்கிராம ஏரிக்கரை அருகே சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி மூலம், சாத்தணஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் உள்ள நீர் உறிஞ்சும் மின் மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பம், சில மாதங்களாக சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், காற்று, மழைக்கு எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழக்கூடும் என அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். எனவே, சேதமான பழைய மின்மாற்றியை அப்புறப்படுத்தி அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News