ஈச்சர் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து !

திருப்பத்தூர் அடுத்த இராஜாவூர் பகுதியில் ஈச்சர் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-04-26 06:57 GMT

விபத்து 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இராஜாவூர் பகுதியில் ஈச்சர் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியைச் சேர்ந்த சீனு மகன் பாக்யராஜ் வயது 39 இவர் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலைக்கு திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பெண்களை பேருந்தில் அழைத்துச் செல்லும் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம்போல வேலைக்கு பெண்களை அழைத்துச் சென்று மீண்டும் காக்கங்கரை பகுதியில் அனைத்து பெண்களையும் இறுக்கி விட்டு அங்கேயே தான் எடுத்து வந்த பேருந்து நிறுத்திவிட்டு அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் குனிச்சி பகுதிக்கு வீடு திரும்பி உள்ளார். அப்போது இராஜாவூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அதேபோல போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த முருகன் தனது ஈச்சர் வண்டியில் பெயிண்ட் லோடு ஏற்றிக்கொண்டு வேலூர் வரை செல்ல சென்று கொண்டிருந்தார்.

அப்போது இராஜவூர் பகுதியில் எதிர்பாராத விதமாக ‌ இருசக்கர வாகனத்தில் வந்த பாக்யராஜ் கட்டுப்பாட்டை இழந்து ஈச்சர் வாகனத்தின் மீது மோதியதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அக்கம்பாக்கத்தினர் உடனடியாக பாக்கியராஜ் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News