இருசக்கர வாகனத்தின்மீது வேன் மோதி ஒருவர் பலி !
சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-06-08 07:40 GMT
வழக்கு
சிவகங்கை அருகே அரசனூரைச் சோ்ந்தவா் மதுரை வீரன்(42).இவா் தனது இரு சக்கர வாகனத்தில் அருகேயுள்ள திருமாஞ்சோலைக்குச் சென்றாா். அரசனூா் விலக்குப் பகுதியில் சென்ற போது அந்த வழியாகச் சென்ற வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மதுரைவீரனை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.