கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் தர்ணா !

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, மனு அளிக்க வந்த பெண் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திடீா் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Update: 2024-03-27 06:25 GMT

பெண் தர்ணா

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோந்தவா் முத்துமாரி (29). இவரது கணவா் பெருமாள், கட்டடத் தொழிலாளி. இவா்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளாா். இதனிடையே, முத்துமாரிக்கும், பெருமாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், மனைவியை பிரிந்து சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.இதனால், அதிா்ச்சி அடைந்த முத்துமாரி, பெருமாளைச் சந்தித்து சேர்ந்து வாழ அழைப்பு விடுத்தாா். ஆனால், பெருமாள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக புகாா் அளிப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தனது குழந்தையுடன் முத்துமாரி செவ்வாய்க்கிழமை வந்தாா். நுழைவாயில் பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், தரைத் தளத்திலுள்ள மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, ஆட்சியரை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துவிட்டு, அந்தப் பகுதியிலேயே தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
Tags:    

Similar News