புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

குமாரபாளையத்தில் புகையிலைப் பொருட்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-31 05:47 GMT

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்பட போலீசார் பலர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒரு கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை செய்த ராஜம்மாள், 50, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 26 பாக்கெட் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News