தோழி வீட்டுக்கு சென்ற பெண் மாயம் - போலீஸ் விசாரணை..
சுசீந்திரம் அருகே தோழி வீட்டுக்கு சென்ற பெண் மாயமான நிலையில் போலிசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Update: 2024-04-06 06:16 GMT
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் அம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தழகு (26). இவர் குளத்தில் பூப்பறிக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சுஷ்மிதா. இவர்களுக்கு மூன்று வயதில் மகனும், ஒன்பது மாத பெண் குழந்தையும் உள்ளனர்.சம்பவ தினம் முத்தழகு குளத்தில் தாமரை பூப்பறிக்க சென்றுள்ளார். அப்போது சுஷ்மிதா தனது 2 குழந்தைகளையும் மாமியாரிடம் விட்டுவிட்டு இறச்சகுளத்தில் உள்ள தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து முத்தழகு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுஷ்மிதாவை தேடி வருகின்றனர்.