ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞா் பலி

Update: 2023-12-06 11:21 GMT

மின் விபத்து 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள உடையாம்புளி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மகன் சுந்தா்(24). விவசாயியான இவா், மாடுகளையும் வளா்த்து வந்தாா். இவருக்கு சொந்தமான தோட்டம், ஊருக்கு மேல்புறம் உள்ளது. செவ்வாய்க்கிழமை சுந்தா் தனது மாடுகளை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றாா். மாடுகளுக்கு தண்ணீா் குடிக்க வைப்பதற்காக மின் மோட்டாா் இயக்கச் சென்றபோது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Tags:    

Similar News