நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளநீர் வியாபாரி கைது

ஜெயங்கொண்டம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளநீர் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-10 12:20 GMT
கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட செல்வம்..

கடந்த மே மாதம் 1-ஆம்  ஜெயங்கொண்டம் அருகே தேவனூர் கல்வெட்டு பகுதியில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், போலீசாரை கண்டவுடன் தனது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடிவிட்டார். போலீசார் சென்று பார்த்த பொழுது, வாகனத்தில்  நாட்டுத் துப்பாக்கி ஒன்றும்,

தோட்டாக்கள் மற்றும் அதற்கு தேவையான மருந்துகள் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அந்த வாகனத்திற்கு நம்பர் பிளேட் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து மேற்கண்ட பொருள்களை கைப்பற்றிய போலீசார், தப்பி ஓடியவர்  குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு  விசாரணை நடைபெற்ற  நிலையில், தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி குருசாமி மகன் செல்வம் (47 ) இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

செல்வத்தின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வத்தின் மீது கடந்த 2012 ஆம் ஆண்டில் இதுபோல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.  செல்வத்தின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து 20 கிராம் தோட்டா தயார் செய்யும் மருந்தை பறிமுதல் செய்தனர். செல்வத்தை கைது செய்த போலீசார், அவரை தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  அதில் நாட்டுத் துப்பாக்கியை விருத்தாச்சலம் ரோடு மகிமைபுரம் பகுதியில் ரோட்டில் கீழே கடந்து எடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் துப்பாக்கியை வைத்து முயல் வேட்டைக்கு அடிக்கடி சென்று வருவதாக கூறிய செல்வம் அதற்கு தேவையான தோட்டா மற்றும் மருந்துகளை நரிக்குறவர்களிடமிருந்து வாங்குவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து  ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன். செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் .வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகர் உத்தரவின் பேரில் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார் இதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் இந்த செய்தி செல்வம் அடைக்கப்பட்டார்.

மேலும் உண்மையில் துப்பாக்கியை  ரோட்டில் கிடந்து செல்வம் எடுத்ததாரா? அல்லது கள்ளத்தனமாக வாங்கினாரா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.  இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News