பஸ் சக்கரத்தில் சிக்கி ஆவடியில் இளைஞர் பலி

திருத்தணி அருகே பேருந்து பணிமனையில் இளைஞர் மீது பேருந்து ஏறி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-04 15:57 GMT

இளைஞர் பலி

திருத்தணி, ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர் சந்தானம், 38. இவர், ஆவடி பேருந்து பணிமனையில், தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று அதிகாலை 1:00 மணியளவில், பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண்: 580 அரசு பேருந்தை, பேருந்து பணிமனைக்கு கொண்டு சென்று நிறுத்த முயன்றார். அப்போது, கீழே படுத்திருந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞரை கவனிக்காமல், பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது.

இதில், பேருந்தின் பின் சக்கரம், அந்த இளைஞர் மீது ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

    

Tags:    

Similar News