மயிலாடுதுறை அருகே கர்ப்பிணிப் பெண்ணை அடைத்து உதைத்த இளைஞர் கைது

  மயிலாடுதுறை அருகே கர்ப்பிணிப் பெண்ணை அடைத்து உதைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-28 16:04 GMT

காவல் நிலையம்

மயிலாடுதுறை அருகே உள்ள மங்கை நல்லூர் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வம் மனைவி மஞ்சு 20 இவர் ஒன்றரை மாத கர்ப்பிணி ஆவார் செல்வம் சென்டரின் கான்கிரீட் வேலைக்கு சென்றுள்ளார். மனைவியின் பாதுகாப்பிற்காக செல்வத்தின் அக்காள் மகளை பாதுகாப்புக்கு வைத்து சென்றுள்ளார். 

வீட்டில் இல்லாமல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த கணவரின் அக்காள் மகளை திட்டி இழுத்து வந்துள்ளார், இதை கண்ட அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன்(20) என்பவர் ஏன் என்னை திட்டுகிறாய் என்று கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்தது,  மஞ்சுவை அடித்து கீழே தள்ளிவிட்டார் இதனால் மயக்கம் அடைந்த அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்,  இது குறித்து மஞ்சு அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Tags:    

Similar News