ஆத்தூர்: கனமழை சாலையில் தேங்கிய மழை நீர்

ஆத்தூர்: கனமழை சாலையில் தேங்கிய மழை நீர்.

Update: 2024-05-23 06:35 GMT

தேங்கிய மழை நீர்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது கோடை வெயில் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது ஆத்தூர் நகரப் பகுதிகளான முல்லை வாடி, உடையார்பாளையம், விநாயகபுரம் மற்றும் நரசிங்கபுரம் தென்னங்குடி பாளையம், பைத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து கன மழை காரணமாக நரசிங்கபுரம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் தேங்கி நின்ற மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
Tags:    

Similar News