வயிற்று வலி பெண் தற்கொலை

Update: 2023-12-23 09:53 GMT

போலீசார் விசாரணை  

கள்ளக்குறிச்சி மாவட்டம், உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பெரியநாயகி, 39; இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 15ம் தேதி காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், வீட்டிலிருந்த பருத்தி மருந்தினை குடித்தார். அவரது குடும்பத்தினர் பெரியநாயகியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News