தலைமறைவான வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் தலைமறைவான வாலிபர் கைது.போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-03 05:08 GMT
தலைமறைவான வாலிபர் கைது
சேலம் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). இவர் மீது கடந்த ஆண்டு சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மணிகண்டன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.