பொன்னேரியில் கட்டுப்பட்டை இழந்த பேருந்து சாலையோரம் இறங்கி விபத்து

பொன்னேரியில் கட்டுப்பட்டை இழந்த பேருந்து சாலையோரம் இறங்கி விபத்துக்குள்ளனது.

Update: 2024-06-14 16:38 GMT

விபத்தில் சிக்கிய பேருந்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து காட்டூர் கிராமத்திற்கு அரசு பேருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. பொன்னேரி ரயில்வே கேட்டை பேருந்து கடந்து சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.

உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் அலறியடித்து கிழே இறங்கினர். இதனால் 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். பேருந்து ரயில்வே கேட்டை கடந்த போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் திடீரென பழுது ஏற்பட்டதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த சரக்கு வாகனத்தில் மோதுவது போல சென்று சாலையோரம் இறங்கியுள்ளது.

பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் மேற்கொண்டு பேருந்து கவிழாமல் நின்றது. 40பயணிகளுடன் சென்ற போது சாலையோரம் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News