தக்கலை அருகே விபத்து - 5 பேர் படுகாயம் !

டெம்போ  - கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2024-02-24 04:44 GMT
விபத்து
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன் (34). டெம்போ டிரைவர். நேற்று டெம்போவில் செங்கல் ஏற்றிக்கொண்டு வேர்க்களம்பி சென்று செங்கற்களை இறக்கியுள்ளார். பின்னர் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அந்த டெம்போவில் பெண் உட்பட நான்கு தொழிலாளர்கள் இருந்தனர். அதிகாலை 4 மணிக்கு தக்கலையை தாண்டி கொல்லன் விளை என்ற பகுதியில் செல்லும் போது,  எதிரே கார் ஒன்று வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் - டெம்போ  மோதியது.இதில் டெம்போவில் இருந்த தோவாளை பகுதியை சேர்ந்த இந்திரா (46), அருள் செல்வன் (47), கோட்டார் பகுதி சேர்ந்த தங்கராஜ் (57), ராஜேந்திரன் (65)ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.அதேபோல் காரை ஓட்டி வந்த டிரைவர் திக்குறிச்சி பகுதி சேர்ந்த அனீஸ் (25) என்பவரும் படுகாயம் அடைந்தார். விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக டெம்போ டிரைவர் ஜாக்சன் கொடுத்த புகாரி பேரில் கார் டிரைவர் அனீஸ் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News