வந்தவாசி அருகே விபத்து -கூலி தொழிலாளி பலி
வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-30 11:40 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு (75), கூலி தொழிலாளி. இவர் வீட்டிலிருந்து வந்தவாசியில் உள்ள வங்கிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவரது சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து பொன்னூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.