கூடுதல் வகுப்பறை கட்டிட பூமிபூஜை - அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

ரூபாய் 84.72 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்

Update: 2023-11-26 17:28 GMT

ரூபாய் 84.72 இலட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிட பூமிபூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.அம்மாப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இ.செண்பகப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்து தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும், தேவையான கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர், சமையலறைக்கூடம், நூலகங்கள் மற்றும் மராமத்து பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மொத்தம் 08 பள்ளிகளில் மொத்தம் ரூ.1143.72 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கென, அரசின் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அப்பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் இ.அம்மாப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இ.செண்பகப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.84.72 இலட்சம் மதிப்பீட்டில் 04 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட மாத கால ஒப்பந்த அடிப்படையில் தரமான முறையில் கட்டி முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பேசினார்
Tags:    

Similar News