வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் அதிகார நந்தி சேவை

செய்யாறு வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவ விழாவையொட்டி வேதபுரிஸ்வரர், பாலகுஜாம்பிகை அதிகார நந்தி வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Update: 2024-02-19 01:32 GMT

திருவீதியுலா 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் 9 ம் நாளில் வேதபுரிஸ்வரர் மற்றும் பாலகுஜாம்பிகை உற்சவ மூர்த்திகள் அதிகார நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News