பெரியகிருஷ்ணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு, பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2024-04-02 08:25 GMT

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கெங்குவல்லி ஆத்தூர் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஆத்தூர் அருகே பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் அதிமுக வேட்பாளர் குமரகுரு ஆதரித்து அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி மக்களுக்கான ஆட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திராவிட மாடல் அரசை இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

19ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News